உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு

பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு

நாமக்கல்;'நாமக்கல்லில், நாட்டுக்கோழி பண்ணையாளர்களுக்கு, வரும், 25ல் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது' என, கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும் கோழியின நோய் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மையத்தில் பண்ணையாளர்களுக்கான 'நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு' குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு, வரும், 25 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. விபரங்களுக்கு, 04286-233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ