| ADDED : ஜூலை 18, 2024 01:15 AM
சேந்தமங்கலம்,: சேந்தமங்கலம் யூனியன், வெட்டுக்காட்டில் ஏழு ஆண்டாக பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சேந்தமங்கலம் யூனியன், உத்திரக்காவல் பஞ்., வெட்டுக்-காட்டில், கடந்த, 2016ல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்-துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேவை மைய கட்-டடம் கட்டப்பட்டது.இந்த கட்டடம் அப்போதைய மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணியால் திறக்கப்பட்டது. அதன்பின் இந்த கட்-டடத்தை பஞ்., நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்ட-தாலும், கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் குடியிருப்புகள் இல்லா-ததாலும், இந்த சேவை மைய கட்டடத்தை பயன்படுத்தாமல், கடந்த, ஏழு ஆண்டாக அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர். எனவே, பஞ்., நிர்வாகம் பூட்டி வைத்துள்ள இந்த கட்டடத்தை வேறு அரசு பணிக்கு பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.