உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது குடித்துவிட்டு வந்த கணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி

மது குடித்துவிட்டு வந்த கணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி

ராசிபுரம் : ராசிபுரம் அருகே, கணவன் மது குடித்துவிட்டு வந்ததால் ஏற்-பட்ட தகராறில், மனைவி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்-பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுாரை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெகதீசன், 34; தறித்தொழிலாளி. இவ-ரது மனைவி பூங்கொடி, 26. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெகதீசனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்துள்ளார்.இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்-பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பிள்ளாநல்லுாரில் கோவில் திருவிழா நடந்து வருவதால், நேற்றும் ஜெகதீசன் மது குடித்து-விட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்த பூங்கொடி, வீட்டில் கேனில் வைத்தி-ருந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக்-கொண்டார். தீ உடல் முழுதும் பரவியதால், வலி தாங்க முடி-யாமல் பூங்கொடி அலறி துடித்துள்ளார்.சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பூங்கொடியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை