உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தக்காளி விலை உயர்வு

தக்காளி விலை உயர்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதிக்கு கிருஷ்ணகிரி, ஒட்-டன்சத்திரம், தாளவாடி உள்ளிட்ட பகுதியில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மொத்தம் வியாபாரிகளிடம் இருந்து, சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம், தக்காளி கிலோ, 25 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டது. தொடர் முகூர்த்த நாட்கள் என்பதால், தக்-காளி விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம், தக்காளி கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !