உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 199 கிலோ ரூ.1.24 லட்சத்திற்கு ஏலம்

பட்டுக்கூடு 199 கிலோ ரூ.1.24 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.நேற்று, 199.8 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 680 ரூபாய், குறைந்தபட்சம், 600 ரூபாய், சராசரி, 622 ரூபாய் என, 199.8 கிலோ பட்டுக்கூடு, 1.24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ