மேலும் செய்திகள்
வாலாஜாபாதில் ரயில்வே பணிகள் விரிவாக்கம்
18-Aug-2025
நாமக்கல், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு, 2,600 டன் ரேஷன் அரிசி வந்திறங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழிப்பண்ணகைளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாங்கி வரப்படும்.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,600 டன் ரேஷன் அரிசி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டது.பின் அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி நல்லிபாளையத்தில் உள்ள உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
18-Aug-2025