உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார்த்திகை முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

கார்த்திகை முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்-கிறார். இங்கு, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கி-ழமை, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில், ஆஞ்சநே-யருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடத்தப்படும்.அதன்படி, காத்திகை முதல் ஞாயிறான நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமி வெண்பட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை