மக்காச்சோளத்தில் ஊடு பயிர் வேளாண்துறை அறிவுரை
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் புழுக்கள் பாதிப்பு அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த வேளாண்துறை-யினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்காச்சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயி-ரிடுவதன் மூலம் புரோடினியா புழுக்களை கட்டுப்படுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்-கையை கட்டுபடுத்தலாம். இதன் மூலம் மக்காச்சோளத்தில் விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்-ளது.