உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சித்திரை மாத அமாவாசை; தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்

சித்திரை மாத அமாவாசை; தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்

நாமக்கல்: சித்திரை மாத அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.அதன்படி, சித்திரை மாத அமாவாசையான, நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை