உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

பள்ளிப்பாளையம்: காவிரி பகுதியில் பொதுமக்கள், 'மஞ்சப்பை' பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்-பட்ட காவிரி பகுதியில், பொது மக்கள் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். பேர-ணியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்படுத்து-வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என, கோஷம் எழுப்பினர். மேலும், அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளி-டமும், பொது மக்களிடமும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்-கினர். இந்த விழிப்புணர்வு பேரணியில், செயல் அலுவலர் இளவரசன், பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி