உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய கிணற்றில் காப்பர் ஒயர் திருட்டு

விவசாய கிணற்றில் காப்பர் ஒயர் திருட்டு

திருச்செங்கோடு,: திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம், குட்டை தோட்டம் பகு-தியை சேர்ந்தவர் செங்கோட்டையன், 73; இவரது விவசாய கிணற்றில் உள்ள மோட்டாருக்கு, 60 மீட்டர் காப்பர் ஒயர் இணைப்பு கொடுத்திருந்தார்.சில நாட்களுக்கு முன், இந்த காப்பர் ஒயரில், 40 மீட்டர் அள-விற்கு மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இதேபோல், வலுக்குப்பாறை காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி, 68, என்பவ-ருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்து, 25 மீட்டர் காப்பர் ஒயர் திருடப்பட்டுள்ளது.மண்டகப்பாளையம், கருங்கல்மேடு பகுதியை சேர்ந்த மணி, 69, என்பவரது மாந்தோப்பில் இருந்து, 200 கிலோ மாங்காய்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர. இதுகுறித்து புகார்படி, திருச்செங்-கோடு ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை