மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
01-Aug-2025
ப.வேலுார், ப.வேலுாரில், இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ப.வேலுார் அருகே வெங்கரை டவுன் பஞ்.,க்கு உட்பட்ட காவேரி ஆற்றில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கரையோரத்தில் கிடந்தது. காவிரி ஆற்றுக்கு, நேற்று காலை சென்ற அப்பகுதி மக்கள், இது குறித்து ப.வேலுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.
01-Aug-2025