உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்வாரிய பொறியாளர் பலி

மின்வாரிய பொறியாளர் பலி

ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் மணி, 59; ப.வேலுார் மின்வாரிய பவர் ஹவுசில், இரண்டாம் நிலை இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், கபிலர்மலையில் உள்ளது. நேற்று முன்தினம், கூலித்தொழிலாளர்கள், இவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மணி, திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ