உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம்

ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம்

எருமப்பட்டி, நவ. 12-எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் திங்கட்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. சந்தைக்கு முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதன்படி, நேற்று நடந்த ஆட்டுசந்தைக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விற்பனை அதிகரித்து, 40 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி