உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நாமக்கல் - மோகனுார் சாலை, அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமச்சந்தின் தலைமை வகித்தார். அதேபோல், நாமக்கல் - திருச்சி சாலையில் செயல்படும், கவிஞர் ராமலிங்க அரசு மகளிர் கல்லுாரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத்தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கை- 2020ஐ திரும்ப பெற வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கல்லுாரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது, 65 என்பதை உறுதி செய்ய வேண்டும். நிபந்தனைகள் இன்றி பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பன உள்பட, 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி