உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தற்காலிக பட்டாசு கடையில் கு.பாளையம் தாசில்தார் ஆய்வு

தற்காலிக பட்டாசு கடையில் கு.பாளையம் தாசில்தார் ஆய்வு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு பலரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் ஈடுபட்டார். நேற்று, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் களஆய்வு மேற்கொண்டார்.கடைகள் அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா? உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா? தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடையில் தீ அணைப்பு கருவிகள், மணல் நிரம்பிய பக்கெட் உள்ளதா மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், அருகே காஸ் குடோன்கள் ஏதாவது அமைந்துள்ளதா? என, ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை