மேலும் செய்திகள்
ஈஷாவில் தைப்பூச திருவிழா
12-Feb-2025
நாமக்கல்: ஈஷா யோகா மையத்தின் நாமக்கல் கிளை சார்பில், மகா சிவராத்திரி விழா வரும், 26ம் தேதி மாலை 6:00 மணி முதல் 27ம் தேதி அதிகாலை, 6:00 மணி வரை, நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கோவை ஈஷா மையத்தில், ஆதியோகி சிவன் முன், சத்குரு தலைமையில் நடைபெறும், மகா சிவராத்திரி விழா முழுமையாக நேரலையில் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சிவராத்திரி நாள் இரவு முழுவதும் விழித்திருந்து, மனித உடலில் முதுகு தண்டை நேராக வைத்து யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட்டால் உடல் அளவிலும், மனதளவிலும், ஆன்மிக நிலையிலும் அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.உலகின் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும் சிவராத்திரி விழாவில் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை, நடனம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விழாவில், சத்குரு வழிகாட்டும் தியானங்களும், அருளுரைகளையும் கேட்கலாம். மேலும், பிரசாதமாக விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என, ஈஷா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
12-Feb-2025