உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் தாக்கி படுகாயம்: வீல் சேரில் வந்து மனு

மின்சாரம் தாக்கி படுகாயம்: வீல் சேரில் வந்து மனு

நாமக்கல்:நாமக்கல் அருகே, கதிராநல்லுாரை சேர்ந்தவர் காளியப்பன், 29; கட்டட மேஸ்திரி. இவர் கடந்த, மே, 3-ல் கண்ணுார்பட்டியில் ஒரு வீட்டில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். இந்நிலையில், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வீல் சேரில் குடும்பத்துடன் வந்த காளியப்பன், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது புதுச்சத்திரம் போலீசில் புகாரளித்தேன். ஆனால், போலீசார் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என, தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை