உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோல்டன் மன்றம் சார்பில்வ.உ.சி., பிறந்தநாள் விழா

கோல்டன் மன்றம் சார்பில்வ.உ.சி., பிறந்தநாள் விழா

ராசிபுரம்: ராசிபுரம் கோல்டன் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில், வ.உ.சி., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விப்ஜியார் அறக்கட்டளை தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் தில்லைக்கரசன், துணை தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க செயலாளர் இளங்கோ வரவேற்றார். வ.உ.சி., உருவப்படத்துக்கு, சுதந்திர போரராட்ட தியாகி மாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், வ.உ.சி., வாழ்கை குறித்து நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.சங்கத் தலைவர் குபேர்தாஸ், கவுன்சிலர் சீரங்கன், சங்க துணைச் செயலாளர் வடிவேல், வக்கீல் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி