உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் நலப்பணியாளர்காலியிடம் அறிவிப்பு

மக்கள் நலப்பணியாளர்காலியிடம் அறிவிப்பு

நாமக்கல்: 'பெரியகுளம், கனகபொம்மன்பட்டி பஞ்சாயத்தில், மக்கள் நலப்பணியாளர் காலிப்பணியிடம் உள்ளது' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.இகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டம், பெரியகுளம் மற்றும் கனகபொம்மன்பட்டி பஞ்சாயத்தில், மக்கள் நலப்பணியாளர் காலிப்பணியிடம் உள்ளது. அந்த பணியிடத்துக்கு, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி., வகுப்பினர், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.சம்மந்தப்பட்ட பஞ்சாயத்தை சேர்ந்த தகுதியுடைவர்கள், மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்துக்கு, வரும் 19ம் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் நேரில் வரவேண்டும். வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையும் உடன் எடுத்து வரவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை