பண்ணைகுட்டையில் பணி செய்ய பி.டி.ஓ.,விடம் மனு
பண்ணைகுட்டையில் பணிசெய்ய பி.டி.ஓ.,விடம் மனுஎலச்சிபாளையம், செப். 20-மானத்தி செம்மாங்காட்டுபுதுார் கிராமத்தில், தேசிய ஊரக பணியாளர்களுக்கு பண்ணைகுட்டையில் தொடர்ந்து பணி வழங்ககோரி, பி.டி.ஓ., அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.எலச்சிபாளையம் யூனியன், மானத்தி பஞ்., செம்மாங்காட்டுபுதுார் அருந்ததியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2022ல், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை திட்டத்தில், பண்ணைகுட்டை அமைத்து மக்கள் பணி செய்து வந்தனர். இந்நிலையில், பண்ணை குட்டையை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, சேதாரம் செய்துள்ளார். மக்கள் அளித்த புகார் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குட்டையை சீரமைத்தனர்.இருந்தும் அப்பகுதியை சேர்ந்த, தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு இதுவரை அக்குட்டையில் பணி வழங்கவில்லை. எனவே, தொடர்ந்து பகுதி மக்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட மக்கள் மனுஅளித்தனர்.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.