மேலும் செய்திகள்
ஐப்பசி முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
21-Oct-2024
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் பிர-சித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இந்த ஆஞ்சநேயருக்கு, நேற்று ஐப்பசி மாத சனிக்கிழமையை-யொட்டி, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்-வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்-பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். முன்னதாக, மலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
21-Oct-2024