கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம், சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது.நேற்று, ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை, 6:00 மணி முதல் மாலை வரை மூலவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், ஜவ்வாது, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.கோவில் முழுவதும் பலவகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் வெளிப்பிரகாரத்தில் உட்சவ மூர்த்தியான முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.