உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இரு பைக்குகள் மோதல் மாணவர்கள் உட்பட மூவர் பலி

இரு பைக்குகள் மோதல் மாணவர்கள் உட்பட மூவர் பலி

சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதுாரை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி டேவிட், 25. அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் மோகன்குமார், 25, பூவரசன், 25. மூவரும் டேவிட்டிற்கு சொந்தமான 'பல்சர்' பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு சேந்தமங்கலத்தில் இருந்து, புதன்சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.சாலையூர் அருகே சென்ற போது, சேந்தமங்கலம், செல்லியம்மன் பாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் கவுதம், 17, அவரது நண்பர் சரவணன், 17, ஆகியோர் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில், புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின.இதில், பைக்கில் பயணம் செய்த ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த டேவிட், பிளஸ் 2 மாணவர் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த மற்ற மூவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு பிளஸ் 2 மாணவன் கவுதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த பூவரசன், மோகன்குமார் நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ