உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரவள்ளி விலை நிர்ணயம் நாளை முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி விலை நிர்ணயம் நாளை முத்தரப்பு கூட்டம்

சேலம்: மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் செய்வது குறித்த முத்தரப்பு கூட்டம், நாளை (5ம் தேதி) நடக்கிறது.சேலம், சேகோசர்வ் செயலாட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி வெளி-யிட்டுள்ள அறிக்கை:சேலம் மாவட்டத்தில், மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, மரவள்ளி பயிரிடும் விவசா-யிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவ்வரிசி வியாபா-ரிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், நாளை மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்-டத்தில் சேகோசர்வ் செயலாட்சியர், தோட்டக்கலை துணை இயக்-குனர், வேளாண் துணை இயக்குனர் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சேலம் மாவட்-டத்தில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியா-ளர்கள், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் வியாபாரிகள் கலந்து கொள்-ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி