உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கர்நாடகாவில் இருந்து 2,500 டன் மக்காச்சோளம் நாமக்கல் வருகை

கர்நாடகாவில் இருந்து 2,500 டன் மக்காச்சோளம் நாமக்கல் வருகை

நாமக்கல்,: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்படுகிறது.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு, கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 2,500 டன் மக்காச்சோளம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. பின், அங்கிருந்து லாரிகளில் ஏற்றி, தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை