உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை

பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை

ப.வேலுார்: பிரதோஷத்தையொட்டி, ப.வேலுார் எல்லையம்மன் கோவிலில், 400 ஆண்டு பழமையான ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால், 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல், ப.வேலுார் சுற்றுப்பகுதியிலுள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை