3வது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து
3வது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்துநாமகிரிப்பேட்டை, டிச. 11- நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும், செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டை யில் தான் உள்ளது. 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., மூலம் ஏலம் நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும். தற்போது மஞ்சள் சீசன் முடியும் நிலையில் உள்ளதால், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஏலம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், மஞ்சளை தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு வரமுடியவில்லை. இதனால், நேற்று, 10க்கும் குறைவான மஞ்சள் மூட்டைகளே வந்திருந்தன. இதனால், மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. கடந்த, 3 வாரமாக தொடர்ந்து மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.