உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துறவறம் பூண்ட இருவர் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலம்

துறவறம் பூண்ட இருவர் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலம்

குன்னுார்;குன்னுார் ஜெயின் சமூகத்தின் குரு ஆச்சாரியர் ஜுகோதே பிரபு. இவரை குருவாக ஏற்று பெங்களூருவை சேர்ந்த மது ஜெயின் என்பவரின் மகள் தார்மிகா மதுபாய்,34, ஜபல்பூரை சேர்ந்த ஹேமலதா, 65, ஆகியோர் துறவறம் மேற்கொண்டனர். இவர்களை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி குன்னுாரில் நடந்தது. ஜெயின் சமுதாய மக்கள் கூறுகையில்,''உலக வாழ்க்கையில் இருந்து மோட்ச நிலையை அடைய வேண்டும் என்ற மகாவீரரின் போதனைகளை பின்பற்றி துவங்கிய இந்த துறவறத்தில் சம்பிரதாயங்களுடன் மவுன விரதம் உண்ணா நோன்பு மேற்கொள்ள உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு துறவறம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி தற்போது நடந்தது,' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி