உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனியார் இடத்தில் கரடி பலி: வனத்துறை விசாரணை

தனியார் இடத்தில் கரடி பலி: வனத்துறை விசாரணை

கூடலுார்;மசினகுடி, சிங்காரபகுதியில் தனியார் இடத்தில் கரடி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதுமலை, மசின குடி கோட்டம் சிங்காரவனச்சரகத்துக்கு உட்பட்ட, தனியார் காபிதோட்டத்தில், கரடிஇறந்து கிடந்தது.மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் ஜான் பீட்டர் அதன் உடலை நேற்று ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் கரடிக்கு ஒன்றரை வயது இருக்கும். வேறுவிலங்கு தாக்கியதில், அதன் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ