ஊட்டி;விபத்தில் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, கருணைத் தொகை வழங்கப்படுகிறது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில், ஈஷ்ராம் தரவுத்தளத்தில், 2022 மார்ச், 31ம் தேதி வரை விவசாயம் சார்ந்த தொழில்களில், 19 ஆயிரத்து, 496; கட்டுமான தொழில்களில், 5,670 உட்பட, மொத்தம், 46 ஆயிரத்து 27 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.பதிவு செய்த தொழிலாளர்களில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள், இரண்டு கண்கள், கால்கள், கைகளை இழந்தவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய்; ஒரு கண், கை, கால்களை இழந்தவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் உயிரிழந்திருந்தாலோ, ஊனமடைந்திருந்தாலோ, தொழிலாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் உதிரி மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். தொடர்பு கொள்ளும் முகவரி: தொழிலாளர் உதவி ஆணையம் (அமலாக்கம்) அலுவலகம், 31ஏ, அப்பர் சர்ச் ரோடு, பெட்போர்டு, குன்னுார். தொலைபேசி எண்: 0423 2232108. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.