உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார், தேவர் சோலை மச்சிக்கொல்லி பேபி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 47. இவரது மனைவி குஞ்சு, 40. ரவிச்சந்திரன் ஒரு மாதத்திற்கு முன், கூலி வேலைக்காக கர்நாடகா சென்றார்; இரு தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.நீண்ட நேரத்துக்கு பின், மனைவி வீட்டுக்கு வந்தார். இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், கட்டையால் மனைவியை தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடி போதையில் இருந்த ரவிச்சந்திரன், மனைவி இறந்தது தெரியாமல் வீட்டில் உறங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை மனைவி இறந்தது தெரிய வந்தது. தேவர்சோலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை