உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலையில் நடந்த சுதந்திர தினவிழா; தேசிய கொடிக்கு யானைகள் மரியாதை

முதுமலையில் நடந்த சுதந்திர தினவிழா; தேசிய கொடிக்கு யானைகள் மரியாதை

கூடலுார் : முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று சுதந்திர தினவிழா சிறப்பாக நடந்தது. வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க, அவற்றின் மீது பாகன்கள் தேசிய கொடியை ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகள் முன், வன ஊழியர்கள் அணி வகுத்து நின்றனர்.முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொ) வெங்கடேஷ் பிரபு தேசிய கொடி ஏற்றினார். அப்போது, வன ஊழியர்கள் மரியாதை செலுத்த, வளர்ப்பு யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.இந்த நிகழ்வு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. விழாவில், வனச்சரகர்கள் பரத், சிவக்குமார், விஜய் மற்றும் பாகன்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ