உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள்

மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள்

கருமத்தம்பட்டி: 'மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கருமத்தம்பட்டி நகராட்சி துணைத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கருமத்தம்பட்டி நகராட்சி துணைத்தலைவர் யுவராஜ் கூறுகையில்,'சான்றுகள் கேட்டு வரும் பொதுமக்கள், கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகளால், அலைக்கழிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் முறைகேடுகள் செய்வதாகவும் பொதுமக்கள் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ