உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில்கள் முன் கழிவுநீர்; உள்ளூர் மக்கள் அதிருப்தி

கோவில்கள் முன் கழிவுநீர்; உள்ளூர் மக்கள் அதிருப்தி

குன்னுார்;குன்னுார் மவுண்ட் ரோட்டில் நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்ட பணியால் விநாயகர் கோவில் செல்லும் பாதையில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.குன்னுார் மவுண்ட் ரோட்டில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்கனவே சென்ற கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்யும் கன மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து கழிவு நீருடன் சேர்ந்து தடம் மாறி செல்கிறது. இதனால், விநாயகர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில்களின் முன்பும் பாதையிலும் தேங்கி நிற்கிறது.மேலும், மார்க்கெட்டில் தையல் கடைகளுக்குள் புகுந்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, ஆய்வு செய்து அடைப்புகளை அகற்றி சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ