| ADDED : அக் 27, 2024 11:58 PM
கோத்தகிரி : கோத்தகிரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு படுக்கையில், நாய் ஓய்வெவெடுத்த 'போட் டோ' சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கோத்தகிரி அரசு மருத்துவமனையில், அவசர பிரிவு, மகப்பேறு, சித்தா, குழந்தைகள் நல பிரிவு எக்ஸ்ரே உட்பட, பல்வேறு பிரிவுகளில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற நோயாளிகளுடன், உள் நோயாளிகள்என, ஒரு நாளுக்கு, 200 முதல், 300 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளி ஒருவர், அவசர சிசிச்சை பிரிவு படுக்கையில் நாய் படுத்து உறங்கியதை, தனது மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு, நோயாளிகள் உட்பட, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.