உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆதியோகி ரத யாத்திரை :பக்தர்கள் பிரார்த்தனை

ஆதியோகி ரத யாத்திரை :பக்தர்கள் பிரார்த்தனை

பந்தலுார்;கோவை ஈஷா யோகா மையத்தில், அடுத்த மாதம், 8ல் சிவராத்திரி விழா சிறப்பாக நடக்க உள்ளது. இதுகுறித்து மக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில், ஆதியோகி சிவ ரதயாத்திரை அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பந்தலுார், எருமாடு, வெட்டுவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் வந்ததுடன், ஆதியோகி மக்களுக்கு காட்சி அளித்தார்.பொதுமக்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து சிவபெருமானுக்கு, கற்பூர ஆராதனை காட்டி பிரார்த்தனை செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் சிவராத்திரிக்கு வரவேற்கும் விதமாக அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கி, தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, ஊட்டி, குன்னுார் பகுதிகளிலும், ரத ஊர்வலம்நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை