உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்று நீரில் மாயமான வாலிபர் உடல் மீட்பு

ஆற்று நீரில் மாயமான வாலிபர் உடல் மீட்பு

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அடிப்பெரண்டா பகுதியைச் சேர்ந்தவர் உம்மர் பாரூக், 45. இவர், உறவினருடன் கடந்த 26ம் தேதி வீட்டின் அருகே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை காண சென்றார். அப்போது, கால் தவறி ஆற்றில் விழுந்த உம்மர்பாருக் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினரும், நெம்மாரா போலீசாரும், பொதுமக்களின் உதவியுடன் ஐந்து நாட்களாக உம்மர்பாருக் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை உம்மர்பாரூக் உடல், வீழ்லி என்ற பகுதியில் பாலத்தின் அடியில் கிடப்பதை கண்ட மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆலத்தூர் தாலுகா மருத்துவமனைக்கு போலீசார் அனுப் பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி