உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மக்கள் நல வாழ்வு சங்க கூட்டம்

மக்கள் நல வாழ்வு சங்க கூட்டம்

ஊட்டி : அகில இந்திய மாற்று திறனாளிகள் மக்கள் நல வாழ்வு சங்க கூட்டம் ஊட்டியில் நடந்தது. சங்க தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில்,'மாற்று திறனாளிகள் வசிக்கும் தாவனெ இந்திராநகர் பகுதியில் இருள் சூழ்ந்துள்ளதால் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்; ஊட்டி ஹோபார்ட் பள்ளி அருகில் டவுன் பஸ் ஸ்டாண்ட்டில் காந்தல், தலைகுந்தா, கல்லட்டி, கோட்டட்டி, கேர்ன்ஹில் பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் காத்து நிற்பதால் இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும்; சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் ஊட்டி படகு இல்லம் பகுதியில் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ