தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. மாநில முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் வாயிலாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுக்காக்களில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று, பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, இன்றும் வீடுகளுக்கு சென்று, பொது வினியோக திட்டத்தில், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அந்தந்த பகுதிகளுக்கு வரும் வாகனங்களின் வாயிலாக தவறாமல் ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும்.