உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை அதிகரித்தும் அணையில் நீர் குறைவு நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

மழை அதிகரித்தும் அணையில் நீர் குறைவு நீலகிரியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

ஊட்டி : நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள போதும் மின் உற்பத்திக்கு பயன்படும் முக்கிய நீர்த்­தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு இல்லை.நீலகிரியின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மழை சீராக பெய்யாமல் விட்டு, விட்டு பெய்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் முதல் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நாள் முழுவதும் மழை பெய்து வருவதால் பகல் நேரங்­களிலேயே கடும் குளிரான காலநிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.கடந்த 4ம் தேதி அதிகபட்சமாக தேவாலாவில் 74 மி.மீ., மழை பதிவாகியது.

குன்னூரில் 1.20 மி.மீ., கூடலூரில்15 மி.மீ., குந்தாவில் 3 மி.மீ., கேத்தியில் 6 மி.மீ., கோத்தகிரியில் 2 மி.மீ., நடுவட்டத்தில் 24 மி.மீ., ஊட்டியில் 10 மி.மீ., கிளன்மார்கனில் 12 மி.மீ., அப்பர் பவானியில் 24 மி.மீ., எமரால்டில் 8 மி.மீ., அவலாஞ்சியில் 35 மி.மீ., கெத்தையில் 1 மி.மீ., என மொத்தம் 221.7 மி.மீ., மழை பதிவா­கியுள்ளது.இதன் பின்பு மழையின் தாக்கம் குறைந்தது. மேலும் மின் உற்பத்திக்கு பயன்படும் அணை­களான எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகள் நிரம்பவில்லை. நீர்மட்டமும் குறைவாக உள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை முடியும் தருவாயில் உள்ளதால், வரும் சில நாட்களில் அணைகள் நிரம்ப வாய்ப்பில்லை. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கவும் மின் உற்பத்தி பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை