மேலும் செய்திகள்
நீர்மோர் பந்தல்எம்.பி., திறப்பு
01-Apr-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே வெள்ளேரி பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் மானு. இவர் கடந்த பிப்.,10ம் தேதி வயநாடு மாவட்டம், காப்பாடு என்ற இடத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.அன்று இரவு கணவன் மனைவி இருவரும் அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் போது, அந்த வழியாக வந்த யானை தாக்கியதில் மானு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சந்திரிகா ஓடி உயிர் தப்பினார்.கேரளா மாநில வனத்துறை, மானுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர், உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், 'இழப்பீடு தொகை, 10- லட்சம் ரூபாயை மனைவி மற்றும் இவர்களின் மூன்று மகள்களின் பெயரில் தனித்தனியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்,' என்றனர்.அதனை அதிகாரிகள் ஏற்று கொண்ட நிலையில், இவர்களின் மகள்கள், சனீஷா,12, சங்கீதா,6, பபினா-,4, ஆகிய மூவருக்கும் ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டை இல்லாத நிலையில் வங்கி கணக்கு துவங்காததால், நிவாரணத் தொகை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.தகவல் அறிந்த பந்தலுார் தாசில்தார் சிராஜுநிஷா, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ., அசோக்குமார் ஆகியோர், நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்க மேலாளர் ஜான் உதவியுடன், குழந்தைகளின் பெயர் விபரங்களை பதிவு செய்து, ஆதார் தலைமை இடத்திற்கு கடிதம் அனுப்பி அனுமதி பெற்று, தற்போது ஆதார் எடுத்துள்ளனர்.தாசில்தார் கூறுகையில், 'ஆதார் அட்டை கிடைத்தவுடன், கேரளா மாநில வனத்துறையின் உதவியுடன் இவர்களுக்கு நிவாரண தொகை பெற்று தரப்படும்,' என்றனர்.
01-Apr-2025