சமூக நல்லிணக்க ஊராட்சி விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு
ஊட்டி; சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, கவுரவிக்கும் விதமாக, தகுதி படைத்த, 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன், தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில், 2025ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர், விண்ணப்ப படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து, இம்மாதம், 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இணைய தளத்தில் இருந்து விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.