பூட்டி வைத்த நகராட்சி கழிப்பிடம் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
குன்னுார் : குன்னுார் சிம்ஸ்பூங்கா அருகே நகராட்சியால் சீரமைத்த கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் பாதிப்படைகின்றனர்.குன்னுாரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால். அடிப்படை வசதிகள் செய்ய நகராட்சி தீவிரம் காட்டாமல் உள்ளது. குறிப்பாக, சிம்ஸ் பார்க் அருகே, நகராட்சி சார்பில், கழிப்பிடம் சீரமைக்கப்பட்ட போதும், திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் திறந்த வெளி பகுதிகளை அசுத்தம் செய்வது தொடர்கிறது. எனவே, உடனடியாக கழிப்பிடத்தை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பயன்படுத்தவும், சுகாதாரமாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.