பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள்நூதன போராட்டம்
பெரம்பலுார் சர்க்கரை ஆலையின், 47வது ஆண்டு பேரவை கூட்டம் சர்க்கரை துறை ஆணையர் அன்பழகன் தலைமையில் பெரம்பலுாரில் நடந்தது.கூட்டத்தில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விவசாயிகள் முக்காடு அணிந்து, காதை மூடிக்கொண்டு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.