மின் வேலியில் சிக்கி இருவர் பலி
கை.களத்துார்; தோட்டத்து மின் வேலியில் சிக்கி இரு விவசாயிகள் உயிரிழந்தனர். பெரம்பலுார் மாவட்டம், வெண்பாவூரை சேர்ந்தவர் பெரியசாமி, 62. அதே ஊரை சேர்ந்தவர் செல்லம்மாள், 55, பெரியசாமி தன் வயலில் பயிரிட்டுள்ள மக்காசோள பயிரை, காட்டு பன்றிகளிடமிருந்து காப்பாற்ற, மின் வேலி அமைத்திருந்தார். நேற்று காலை வயலுக்கு சென்ற பெரியசாமி, நிலைதடுமாறி வயலுக்குள் விழுந்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அதேபோல, செல்லம்மாளும் அதே மின்வேலியில் சிக்கி இறந்தார். கை.களத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.