மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
5 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
5 hour(s) ago
ராமேஸ்வரம்:கடந்த ஜூன், 22ல் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று விசைப்படகுகளில் இருந்த, 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு ஆக., 20 நீதிமன்ற வாய்தா நாளாக இருந்தது. இந்நிலையில், மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை முடித்து வைக்க கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ்ப்பாணம் நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று 22 மீனவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களில் 19 பேரை நீதிபதி விடுவித்தார்.மூன்று விசை படகுகளின் டிரைவர்களுக்கு, இலங்கை மதிப்பில் தலா, 40 லட்சம், இந்திய மதிப்பில், 11.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago