உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு

நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு

நயினார்கோவில்: -பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழாவையொட்டி அம்மன் தேரோட்டம் நடந்தது.நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூர திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று காலை அம்மன் தேரோட்டம் நடந்தது.காலை 8:00 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தில் நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து நாளை(ஆக.8) காலை 8:00 மணிக்கு அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இரவு மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.9 காலை 9:00 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை