உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் தேசிய சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்

ராமேஸ்வரத்தில் தேசிய சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் உள்ளூர் மக்கள் டூவீலர், ஆட்டோவில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். பிரதானமான இச்சாலையில் சீதா தீர்த்தம் அருகில் சாலை ஓரத்தில் 100 மீ.,ல் மணல் குவிந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் டூவீலர், ஆட்டோக்கள் மணலில் சிக்கி நிலைதடுமாறி கவிழ்கிறது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். மணல் குவியலை அகற்றி சாலையை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.இதனால் விபத்தில் சிக்கி மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மணல் குவியலை அகற்ற கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை