உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சம்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சம்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச விழா வைகை ஆற்றில் கோலாகலமாக நடந்தது.எமனேஸ்வரத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோத்ஸவம், வசந்த உற்ஸவ விழா நடக்கிறது.தொடர்ந்து கஜேந்திர மோட்ச திருவிழா குழுவினரால் 2ம் ஆண்டாக கஜேந்திர மோட்ச லீலை வைகை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது மாலை 5:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் கோயிலில் இருந்து புறப்பாடாகி இரவு 7:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி மண்டகப்படியில் காட்சியளித்தார்.தொடர்ந்து அங்கு பக்தர்களுக்கு மத்தியில் கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் அளிக்கும் விழா நடந்தது. மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நடந்தது.மேலும் இரவு 10:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பெருமாள் புறப்படாகி ரத வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை